ஆசிபாவிற்கு நீதிகேட்டு தோப்புத்துறையில் மஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்…!

வேதை.ஏப்.20., இன்று (20/04/2018) காஷ்மீரில் எட்டு வயது சிறுமி #ஆசிபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு நாகை தெற்கு மாவட்டம் ,வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

மஜக நகர செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான குழந்தைகள் உட்பட முந்நூறுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.

இதில் சகோதரி ஆசிபாவிற்கு நீதிவேண்டும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான மரண தண்டனை வழங்கவேண்டும் உள்ளிட்ட பதாகைகளை சிறுவர், சிறுமியர்கள் ஏந்திய வாறு கோஷமிட்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி

#MJK_IT_WING

#மஜக_வேதை_நகரம்

20.04.2018